fbpx

3-4 மாதங்கள் ஆனாலும் எலுமிச்சை பழம் கெட்டுப் போகாது!… இப்படி செய்யுங்கள்!… சில டிப்ஸ்!

எலுமிச்சை பழம் கெட்டுப் போகாமல் இருக்க நாம் செய்யவேண்டிய சில டிப்ஸ் குறித்து இதில் பார்க்கலாம்

எலுமிச்சையை வாங்கி சேமித்து வைத்தாலும், சில நாட்களிலேயே கெட்டுப்போக ஆரம்பித்துவிடும். மழைக்காலத்தில் குறைந்த விலையில் நிறைய எலுமிச்சை பழங்கள் சந்தையில் கிடைக்கும். அதேசமயம் கோடையில் எலுமிச்சை மிகவும் உயர்ந்த விலையில் கிடைக்கும். இதனால் மக்கள் முன்கூட்டியே எலுமிச்சையை சேமித்து வைக்கிறார்கள் எலுமிச்சையை சேமித்து வைக்கிறார்கள். ஆனால் எலுமிச்சம்பழத்தை நீண்ட நேரம் சேமித்து வைப்பதால், அவை கெட்டுப்போகவும், அத்துடன் காய்ந்து போகவும் தொடங்குகிறது. இதனால் மக்கள் வேதனையடைகின்றன. எனவே, எலுமிச்சையை சேமிக்க விரும்புவோர் இதனைத் தொடர்ந்து படியுங்கள்.

எலுமிச்சை சாற்றை சேமிக்க, 1 கிலோ எலுமிச்சை எடுத்து அதன் சாற்றை எடுத்து அதை ஒரு ஜாடியில் வடிகட்டவும். எலுமிச்சை சாறு 500 கிராம் என்றால், ஜாடியில் 600 கிராம் வரை சர்க்கரை சேர்க்கவும். எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை நன்கு கலந்து, கண்ணாடி ஜாடியின் மூடியை மூடி குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன்படுத்துங்கள்.எலுமிச்சைகளை சுத்தமாக கழுவி, பருத்தி துணியால் துடைக்கவும். இப்போது பிரவுன் நிற பேப்பர் பேக் அல்லது டிஷ்யூ பேப்பரில் கட்டி பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து மூடி வைக்கவும். இந்த பெட்டியை குளிர்சாதன பெட்டியில் வைத்து, தேவைப்படும் போது எலுமிச்சை பயன்படுத்தவும். இவ்வாறு எலுமிச்சையை சேமித்து வைத்தால் பல மாதங்கள் கெடாமல், புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நீங்கள் எலுமிச்சையை 3-4 மாதங்கள் சேமிக்க விரும்பினால், எலுமிச்சையை நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு கண்ணாடி ஜாடியில் வைக்கவும், அத்துடன் ஜாடியில் உப்பு சேர்க்கவும், இதனால் எலுமிச்சை சீக்கிரம் கெட்டுவிடாது. ஜாடியில் வைத்த சில நாட்களுக்குப் பிறகு எலுமிச்சை நிறம் மாறும், ஆனால் அது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.எலுமிச்சை பழங்களை இரண்டு மாதங்களுக்கு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, அனைத்து எலுமிச்சைகளிலும் தேங்காய் எண்ணெயை நன்கு தடவி ஒரு கண்ணாடி/ஜாடியில் வைக்கவும். தேங்காய் எண்ணெய் தடவிய பின் ஃப்ரிட்ஜில் வைக்கவும். எலுமிச்சை எண்ணெய் தடவினால் சீக்கிரம் கெட்டுவிடாது. இதனை நீங்கள் பின்பற்றினால் எலுமிச்சைகளை கெட்டுப் போகாமல் சேமிக்க முடியும்.

Kokila

Next Post

25 நாட்களாக தொடரும் வன்முறை...! மணிப்பூர் விரையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...!

Mon May 29 , 2023
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவம்.. மத்திய உள்துறை அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் 25 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் […]

You May Like