fbpx

மலையாளத்தை போல தமிழ் திரையுலகிலும் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு..!! தெலுங்கில் உச்சம்..!! இப்படித்தான் கேட்பாங்க..!!

மலையாள திரைத்துறையில் இருப்பதைப் போலவே தமிழ் திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டியின் அறிக்கை பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நடிகை ஷகிலா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை உச்சபட்சமாக இருப்பதாக தெரிவித்தார்.

பாலியல் தொல்லை கொடுப்பவர்களை தண்டிக்க இதுவே சரியான நேரம். இந்தியா முழுவதும் திரைத்துறையில் உள்ள பாலியல் அத்துமீறல் தொடர்பான விவகாரங்கள் வெளிவர வேண்டும். திலீப் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்காக யாரும் முன்வரவில்லை. குடும்ப சூழலால் பாலியல் தொல்லைகளை சிலர் வெளியே கூறாமல் இருக்கின்றனர். யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது.

மலையாள திரையுலகை போல் தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் இருக்கிறது. தெலுங்கில் இதை விட ஜாஸ்தியா இருக்கு. ஹிந்தியை பொறுத்தவரை இப்படியான சூழல் அங்கு இல்லை. அவர்கள் எடுத்தவுடன் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். அங்கு casting couch (படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது) பிரச்சனை எல்லாம் வராது.

நீ இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால், தயாரிப்பாளர் மற்றும் என்னுடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டுமென மேனேஜர் பேசுவார். ஆனால், முக்கால்வாசி படம் நடித்த பிறகு கிராக்கி காட்ட தொடங்குகின்றனர். முக்கால்வாசி படம் நடித்து விட்டோமே.. இனிமே என்ன? எனக்கு அதில் ஈடுபாடு இல்லை என கூறுவதால் தான் பிரச்சனை வருகிறது. சரியான வார்னிங் கண்டிப்பாக ஆண்களுக்கு கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது” என ஷகிலா தெரிவித்துள்ளார்.

Read More : நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

Actress Shakila has said that there is sexual harassment in the Tamil film industry as well as in the Malayalam film industry.

Chella

Next Post

ஜம்மு காஷ்மீர்.. பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

Thu Aug 29 , 2024
3 Terrorists Killed In 2 Encounters With Security Forces In Jammu And Kashmir's Kupwara

You May Like