fbpx

’அடுத்த ரெட் கார்டு நிக்சனுக்கு தான் போல’..!! ’ரெண்டு பேரும் புதருக்குள்ள என்னடா பண்றீங்க’..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அப்போதிருந்து பிரதீப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய பேர் கருத்துகளை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்களே பிரதீப்புக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு இவரது வெளியேற்றம் முறையில்லாதது எனக் கூறி வந்தனர். இந்நிலையில், பிரதீப்பை விட நிக்சனால்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை போன்ற கருத்துகளைக் கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுக்க சொல்கின்றனர்.

தகாத வார்த்தைகளைப் பேசுவது, அக்கா என்று சொல்லிக் கொண்டே பெண்களைப் பாடி ஷேமிங் செய்வது, ஐஷூவுடன் காதல் என்ற பெயரில் சில்மிஷம் செய்வது என இந்த சீசனில் நிக்சன் அதிக வெறுப்புகளை சம்பாதித்து வருகிறார். நிக்சனின் இந்த தகாத காரியத்தை எல்லாம் அக்கு வேர் ஆணி வேராக பிரித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பிரதீப்புக்கு பதிலாக நிக்சனுக்குதான் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி இருக்க வேண்டும் பிக்பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

’120 கைதிகளுக்கு ஒரே கழிப்பறை’..!! ’என்னால முடியல’..!! கதறும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி..!!

Tue Nov 7 , 2023
சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில், அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் கைதாகினர். இவர்களின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில், […]

You May Like