fbpx

எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை….! காதலியை கதறவிட்ட காதலன்….!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்துள்ள ஜெகதாம்பா பகுதி சேர்ந்தவர் சிராவணி இவருக்கு சென்ற சில வருடங்களுக்கு முன்னர் குண்டூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்தனர். இந்த நிலையில் சிராவணி சில மாதங்கள் போகாததில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் விசாகப்பட்டினத்திற்கு வந்து அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்தார்.

இத்தகைய நிலையில் தான் கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதர் முறையில் தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர் திடீரென்று சிராவணி நடத்தையில் கோபாலகிருஷ்ணாவிற்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர் பல ஆண்களுடன் நெருங்கி பழகி வருவதும், தொலைபேசி மூலமாக உரையாடி வருவதும் கோபாலகிருஷ்ணாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து பலமுறை கோபாலகிருஷ்ணா சிராவணியை கண்டித்து இருக்கிறார்.

ஆனால் இதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட கோபாலகிருஷ்ணா இது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட கோபாலகிருஷ்ணா சிராவனியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு அவரை காவல் நிலையத்திற்கு சென்று சென்னை கொலை செய்து விட்டதாக தெரிவித்து சரணடைந்துள்ளார்.

Next Post

பெரும் சோகம்..!! பிரபல இளம் நடிகை கார் விபத்தில் மரணம்..!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

Wed May 24 , 2023
சினிமா எனும் மாய உலகம் எல்லோருக்கும் எல்லாம் கதவைத் திறப்பதில்லை. கதவின் வாசலிலேயே வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், வெறுங்கையுடனே தங்களது காலத்தை முடித்துக் கொள்கிறார்கள். கதவுக்கு அருகே வரை கையில் சாவியுடன் செல்பவர்கள் திறக்க தெரியாமல் திரும்பி விடுகிறார்கள். எங்கோ வேடிக்கைப் பார்த்து கொண்டு இந்த விளையாட்டில் இல்லாமல் இருப்பவன், உள்ளே நுழைந்து சிம்மாசனத்தில் அமர்கின்றான். பலரது வாழ்க்கை இப்படி இருக்க, வைபவிக்கு திறமை, அதிர்ஷ்டம் வாய்ப்பு என அனைத்தும் […]
பெரும் சோகம்..!! பிரபல இளம் நடிகை கார் விபத்தில் மரணம்..!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

You May Like