fbpx

வரும் 18ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி..!!

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின்போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், வரும் நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் 18ஆம் தேதி செயல்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரேஷன் கார்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!! சென்னை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Nov 13 , 2023
தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகள் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் […]

You May Like