fbpx

மக்களவை தேர்தல்..!! தாமரை சின்னத்தில் போட்டி..!! புதிய நீதிக்கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், புதிய நீதிக்கட்சி, பாஜக கூட்டணியிலேயே தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்திருந்தார். பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவி வந்தது.

குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுமா அல்லது பாஜகவுடன் அவர்களது கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில், அதிமுக வெளியேறிய பிறகு எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணியில் இணையும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அவர், வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். தமிழ்நாட்டில் இக்கூட்டணியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கும் முதல் கட்சி இதுதான். 2019 தேர்தலில் இவர் அதே தொகுதியில் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்படத்தக்கது.

Chella

Next Post

"லோக்சபா தேர்தலுக்கு முன் 'CAA' அமல்படுத்தப்படும்.." "நம் இஸ்லாமிய சகோதரர்களை தவறாக வழி நடத்துகிறார்கள்" - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி.!

Sat Feb 10 , 2024
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தல்களுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் வருகின்ற லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியாவில் அமல்படுத்தப்படும் என கூறினார் . மேலும் முஸ்லிம் சகோதரர்களை அரசியல் லாபத்திற்காக தவறாக வழி […]

You May Like