fbpx

திரைப்படங்களில் பெண்களை கொல்லும் லோகேஷ்..!! உளவியல் பரிசோதனை தேவை..!! உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு..!!

மதுரையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தை அண்மையில் பார்த்ததாகவும், அது வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில் பெண்களைக் கொல்வது தொடர்வதால், அவருக்கும் அந்த மனநோய் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக மனுதாரர் தெரிவித்திருக்கிறார்.

எனவே, லோகேஷ் கனகராஜிற்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். லியோ படத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தனக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வன்முறை மிகுந்த லியோ படத்தை ஊடகங்களில் ஒளிபரப்ப தடை செய்ய தணிக்கை குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தனி அறையில் சிக்கிய காதல் ஜோடி.! தந்தை கொடுத்த கொடூர தண்டனை.! பரபரப்பு சம்பவம்.!

Thu Jan 4 , 2024
உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த 20 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலைகளை செய்ததாக இளம் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலத்தின் பிளசி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் நீது. இவரும் […]

You May Like