சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாயோன் திருவிழா மற்றும் மூக்கையா தேவரின் 44ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது, நடிகை மற்றும் அரசியல்வாதியுமான குஷ்பூ, நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவன், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். என்று சமீபத்தில் பதிவிட்டிருந்தார், இது குறித்து பத்திரிக்கையாளர் சீமானிடம் கேட்டபோது குஷ்புவுக்கு கோவில் கட்டியது சனாதனம் அல்ல மாட்டு சாணம் என்று காட்டமாக தெரிவித்தார்.
ஒரு பெண் தனக்கு கோயில் கட்டி வணங்குவதை ரசித்தால் அது என்ன மனநிலை, இது தான் சனாதனம் என்றால் அதை ஏற்கிறீர்களா, இது தமிழர்களின் அறியாமையையும், முட்டாள்தனத்தையும், மூடத்தனத்தையும் காட்டுகிறது. இதை குஷ்பூ பேசுவது கொடூரமான ஒன்று. நடிகை குஷ்புவுக்கு கட்டிய கோயிலை இடிக்காம விட்டது எங்களது பெருந்தன்மை என்றும், அந்த கோயில் எங்கு இருக்கிறது என்று பாருங்கள்” என்று சீமான் கூறினார்.
மேலும் பேசிய சீமான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சின்ன பையன் என்றும் எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியாது, எதுவும் தெரியாம பேசக்கூடாது என்று சாடினார். மேலும் உதயநிதிக்கு சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாது, நண்பர் சந்தானத்தை மட்டும் தான் தெரியும் என்றும் விமர்சித்தார்.