fbpx

காதல் ஜோடிகளே..!! இரவில் தனியாக சந்தித்து பேசுகிறீர்களா..? உஷாரா இருங்க..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும், அவரது காதலனும் நேற்றிரவு தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண், தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், அவரை மீட்ட போலீசார், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் இருவரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது, தூத்துக்குடி திம்மையார் காலனி பகுதியைச் சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் வேல்முருகன் (35), லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த யோசேப் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த மகளிர் காவல்நிலைய போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

விடை கொடுத்த மாரிமுத்து...!! விட்டுச் சென்ற சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Sat Sep 9 , 2023
நடிகர் மாரிமுத்து இயக்குநர், நடிகர் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வந்தவர். கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது. மணிரத்னம், ராஜ்கிரண், எஸ்ஜே சூர்யா, வசந்த் உள்ளிட்டோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். நடிகராகவும் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் வில்லன் கோஷ்டியில் இருந்தாலும் ரஜினியுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் […]

You May Like