fbpx

சமந்தாவுடன் காதல்?… ராஷ்மிகாவுடன் லிவிங் டுகெதர்!… செம ஜாலியில் விஜய் தேவரகொண்டா!… வெளியான போட்டோஸ்!

சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் லிவிங் டுகெதர்-ல் உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். புஷ்பா படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதேபோல் விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது சமந்தாவுடன் நடித்துள்ள குஷி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில், விஜய்தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

சமூக வலைதளமான இஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் தங்களது தனித்தனி புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதாவது, சமீபத்தில் ராஷ்மிகா அவரது உதவியாளர் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தில் அவர் நிற்கும் மாடியை கவனித்த ரசிகர்கள் இதை எங்கேயோ பார்த்துள்ளோமே என விஜய்தேவரக்கொண்டாவின் இன்ஸ்டா போஸ்ட் பக்கம் சென்றனர். அதில் விஜய்தேவரகொண்டாவும் அதே மாடி பேக்ரவுண்டுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் கவனித்துள்ளனர். தற்போது அந்த படங்கள் விஜய்தேவரகொண்டாவின் வீட்டில் எடுக்கப்பட்டவை என்றும், இதன் மூலம் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிப்பது உறுதியாகி உள்ளது என்றும் ரசிகர்கள் தகவல் பரப்பி வருகிறார்கள்.

சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இந்த ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா இருவரின் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக, நடிகை சமந்தா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விஜய்தேவரகொண்டா ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்றும், மூன்று மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

தமிழ்நாட்டில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! டாஸ்மாக் கடைகளும் மூடல்..!! வெளியான அறிவிப்பு..!!

Mon Sep 11 , 2023
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செப்.11) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் 23ஆம் […]

You May Like