டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான லேண்ட் க்ரூஸர் காருக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.. 4 ஆண்டுகள் காத்திருந்தால் தான் இந்த காரை வாங்க முடியும் என்ற அளவு அதிக டிமாண்ட் நிலவுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு, லேண்ட க்ரூஸ்ர் காரை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. விலை உயர்ந்த இந்த காரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு கொண்டு வரவில்லை என்பது கூடுதல் சிறப்பு…
இந்த கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற அறிவிப்பு கூட வெளியாகவில்லை.. ஆனால் இந்த கார் ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேருவின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.. அமைச்சர் நேருவிடம் ஏற்கனவே பல டொயோட்டா நிறுவன கார்கள் உள்ளன.. டொயோட்டா ஃபார்ச்சுனர், புதிய மற்றும் பழைய தலைமுறை கார்கள் அவரின் பயன்பாட்டில் இருக்கின்றன.. இந்த நிலையில் ரூ.2 கோடி மதிப்புள்ள புதிய லேண்ட் க்ரூஸர் காரையும் அவர் வாங்கி உள்ளார்.. இந்த காரை அவர் பிரத்யேகமாக இறக்குமதி செய்திருப்பதால் நுழைவு வரி உள்ளிட்ட பல மடங்கு கூடுதல் கட்டணங்களை அவர் செலுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது..
அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு காரை டொயோட்டா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் களமிறக்க இருப்பதாக தெரிகிறது.. எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த லேண்ட் க்ரூஸர் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..