fbpx

’மெட்ராஸ் ஐ’பாதிப்பு..!! ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நெல்லை மாவட்டத்தில் ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெண்படல சுழற்சி எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காற்றின் மூலமாகவும், மாசு மூலமாகவும் வேகமாக பரவக் கூடியது என்பதால் தற்போது பல்வேறு மாவட்டங்களில் ’மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. சென்னையில் கடந்த வாரத்தில் எழும்பூர் மருத்துவமனைக்கு தினசரி 5 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 50 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

’மெட்ராஸ் ஐ’பாதிப்பு..!! ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இதையடுத்து, மற்ற தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மெட்ராஸ் ஐ காற்று மூலமாக பரவுவதால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்டத்தில் வேகமாக மெட்ராஸ் ஐ நோய் பரவி வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நெல்லை மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ரூ.15,000 ஊதியம்...! சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Fri Nov 18 , 2022
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Cent- FLCC Counselor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க […]
அரசுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

You May Like