மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்திய வீரர் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார்.
2 வது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். 3-வது சுற்றில் 20-18 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிரணாய் தட்டிச் சென்றார். இதனையடுத்து இவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.