மேற்கு வங்க மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்தது. திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் ISIS முகாம்களுக்கு கடத்தப்படும் மூன்று பெண்களின் வேதனையை விவரிக்கும் திரைப்படத்திற்கு முதலில் மேற்கு வங்க அரசு தடை செய்துள்ளது. பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல தமிழகத்தில் இந்த படத்தை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கும் முடிவு குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார். இது போன்ற திரைப்படங்கள் இரவு சமூகங்களிடையே விழிப்புணர்வை தூண்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.