டெல்லியில் பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது .
டெல்லியின் இந்தர்புரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்தது கேமராவில் பதிவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் கேமராவில் படம்பிடித்து போலீஸில் புகார் அளித்ததை அடுத்து வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீடியோவின் அடிப்படையில் குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு கைது செய்தனர்.