உத்திரபிரதேத்தில் நாக்கை தனியாக துண்டித்து இளைஞர் ஒருவர் காணிக்கை செலுத்த கோயிலுக்கு வந்த சம்வத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரபிரதேச மாநிலத்தில் கவுஷாம்பியில் மா ஷீட்லா என்ற கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இன்று காலை வந்த சம்பத் (38 ) இளைஞர் ஒருவர் தனது நாக்கை துண்டித்து கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினார். முன்னதாக அவர் தனது மனைவி மன்னோ தேவியுடன் கோயில் அருகே உள்ள கங்கா ஆற்றில் மூழ்கி நீராடிவிட்டு பின்னர் பிரகாரத்தை சுற்றிவிட்டு அம்மனை தரிசித்த பின்னர் சம்பத் தான் கொண்டு வந்த பிளேடால் நாக்கை வெட்டினார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/temple-1662806966-1.jpg)
வாயில் ரத்தம் ஒழுக ஒழுக இருந்த இளைஞரை பார்த்த பக்தர்கள் அங்கிருந்த எச்சரிக்கை ஒலியை எழுப்பினர் இதையடுத்து விரைந்து கோயிலுக்குள் வந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து அவர் மனைவி கூறுகையில் ’’ என் கணவரின் வேண்டுதல் பற்றி எனக்கு தெரியாது. அவர் திடீரென இப்படி காணிக்கை அளிப்பார் என எனக்கு எதுவும் தெரியாது. நானும் பிறரைப் போல அதிர்ச்சியில்தான் உள்ளேன். அவர் ஒரு தீவிர பக்தர். ஆனால் இப்படி செய்வார் என தெரியாது. ’’ என்றார்.
சம்பவம் நடந்த கோயிலில் சிதறிக்கிடந்த ரத்தத்துளிகளை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியானார்கள். மேலும் அதே கோயிலின் ஒரு மூலையில் பிளேடையும் கண்டுபிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.