சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான மோகன்ராஜ். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 37 வயதான மீனாட்சி. இவருக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மோகன்ராஜ் மற்றும் மீனாட்சிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தங்களின் குடும்பத்தினரை விட்டு தனியாக வந்துவிட்டனர். பின்னர், இருவரும் சேர்ந்து அமைந்தகரை முத்துமாரியம்மன் கோயில் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து கடந்த ஒரு வாரமாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மோகன்ராஜ் தனது நெருங்கிய நண்பரான ராமசந்திரன் (40) என்பவரை அவரது வீட்டிற்க்கு மது அருந்த அழைத்து சென்றுள்ளார். பின்னர், மோகன்ராஜ், அவரது கள்ளக்காதலி, மற்றும் ராமசந்தின் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி விட்டு தூங்கியுள்ளனர். நள்ளிரவில் ராமச்சந்திரன் எழுத்து பார்த்தபோது, மீனாட்சியும், ராமச்சந்திரனும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த ராமச்சந்திரன், அலறி துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தனர், சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் ராமசந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜை கைது செய்தனர்.