குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் . இவரது தாய் வளர்மதி(எ)செல்வி, இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது தாய் வளர்மதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரத் என்பவருருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் தகாத உறவு குறித்து நவீன் குமாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து நவீன் குமார் அவரது தாயை கண்டித்துள்ளார். இதனால் வளர்மதி பரத்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
வளர்மதி தன்னிடம் பேசாததால் பரத் ஆத்திரமடைந்துள்ளான். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பரத் வளர்மதி வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் இருந்த நவீன் குமாருக்கும் பரத்துக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த நவீன் குமார், இரும்பு ராடால் பரத்தை தாக்கியுள்ளார். இதில் பரத் பலத்த காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரத் மருத்துவமனையில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தாய் வளர்மதியை கைது செய்து, தப்பியோடிய அவரது மகன் நவீன் குமாரை தேடி வருகின்றனர்.