fbpx

Court: நீதிபதி முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட‌ நபர்…! கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு…!

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி முன்பு கழுத்தில் கத்தியால் அறுத்து ஸ்ரீனிவாஸ் என்பவர் தற்கொலை. இதற்கான காரணம் குறித்து போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஆயுதங்களை அவர் எப்படி உள்ளே கொண்டு வந்தார் என்று விசாரிக்க உத்தரவு. நீதிமன்றம் எண் 1ல் பணியாளரிடம் ஆவணங்களை கொடுக்க ஸ்ரீனிவாஸ் உள்ளே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.அன்ஜாரியா சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான மனுவை விசாரித்து கொண்டிருந்தார். நீதிமன்றம் எண் 1ல் பணியாளரிடம் ஆவணங்களை கொடுக்க ஸ்ரீனிவாஸ் என்பவர் உள்ளே சென்றுள்ளார். போலீசாரால் அடையாளம் காணப்பட்ட அந்த நபர், நீதிபதிகள் அமரும் மேடைக்கு எதிரே நீதிமன்ற அதிகாரிகள் அமரும் மேடைக்கு அருகில் வந்தார்.

அங்கு சில வழக்குகள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் மேஜையில் வைத்துவிட்டு, தானே கொண்டு வந்த கூர்மையான பொருளைக் கொண்டு கழுத்தையும் கழுத்தையும் அறுத்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

Poll: ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை கருத்து கணிப்பு வெளியிட தடை...! தேர்தல் ஆணையம் உத்தரவு...!

Thu Apr 4 , 2024
ஏப்ரல் 19 காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக மக்களவைப் பொதுத் தேர்தல்கள், 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று […]

You May Like