நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் 52 வயதான கண்ணன். சேகோ பேக்டரி வைத்து நடத்தி வரும் இவருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர் தனது பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த 27 வயதான கனிமொழி என்ற பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார். தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் கனிமொழி, முதியவர்களுடன் வசித்து அவர்களை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கண்ணனின் பெற்றோர் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன், இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலனான மோகனிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து, அவரிடம் இருந்த 12 பவுன் நகைகளை மீட்டனர். தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.