திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாக செய்யப்பட்டாா். இதைத்தொடர்ந்து, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் பதவியேற்பு விழாநடைபெற்றது.
இந்த விழாவில், அமைச்சர்களாக ரத்தன்லால் நாத், பிரஞ்சித் சிங்க ராய், டிங்கு, ராய், பிகாஸ் டெப்பர்மா, சுதாங்சு தாஸ், சுக்லா சரண் நோட்டியா ஆகியோருக்கும் முதலமைச்சராக மாணிக் சாஹாவுக்கும் ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.