fbpx

Holiday: மார்ச் 22, 23 மற்றும் 24 தொடர் விடுமுறை…! சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்…!

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பேருந்துகள் மார்ச் 24 அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; மார்ச் 22,23 மற்றும் 24 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 22 (வெள்ளிக்கிழமை) அன்று 305 பேருந்துகளும், மார்ச் 23 (சனிக்கிழமை) 390 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 22, 23 ஆகிய நாட்களில் 65 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பேருந்துகள் மார்ச் 24 (ஞாயிறு) அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே. தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக மார்ச் 22 (வெள்ளிக்கிழமை) அன்று 305 பேருந்துகளும் மற்றும் மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று 390 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட மற்றும் குளிர்சாதனமில்லா 20 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மார்ச் 23, 24 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

IPL 2024!… ஷமிக்கு பதிலாக களமிறங்கும் தமிழக அணி வீரர்!... புதிய கேப்டனுடன் களம்காணும் குஜராத் டைட்டன்ஸ்!

Thu Mar 21 , 2024
IPL: குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக தமிழக அணி வீரர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. நாளை நடைபெறும் இதன் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பெங்களூரு அணியும் மோதுகின்றன. அதன் ஒரு பகுதியாக, முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கான மாற்று வீரரை குஜராத் டைடன்ஸ் அணி […]

You May Like