fbpx

நேற்று படுகொலை..!! இன்று என்கவுண்டரில் பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது.

இருவரும் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் தப்பியோட முயற்சி செய்த நிலையில், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். உடனே உதவி ஆய்வாளர் சுதாகர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சித்தார். அப்போது குண்டு பாய்ந்து இருவரும் கீழே சரிந்தனர்.

இதையடுத்து, உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரவுடி கொலையில் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

Chella

Next Post

இந்தியாவுக்கு விரைவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்...! 2024 மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டைத் தொடங்கும்...!

Wed Dec 27 , 2023
வானிலை முன்னறிவிப்பு, பருவநிலை ஆய்வுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்; புவி அறிவியல் துறை ஏற்கனவே ஒரு குறுகிய கால திட்டத்தைக் கொண்டுள்ளது. இப்போது 2047-ம் ஆண்டில் இந்திய தற்சார்பு திட்டத்தை உருவாக்க அமிர்த காலத்துக்கான திட்டத்தை வகுத்து வருகிறது. இது பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதில் […]

You May Like