அடுத்த 4, 5 நாட்களில் மேற்கு வங்காளம், பீகார் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, அடுத்த 2 நாட்களுக்கு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வெப்ப அலை நிலைமைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கிம் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை வெப்ப அலை நிலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாத தொடக்கத்தில், வடமேற்கு பகுதிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் ஐந்து புள்ளிகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு இந்தியாவில் வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் ஐந்து புள்ளிகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. மேலும், ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.