மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் நாளை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 4) மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.. இது சமண மதத்தை சேர்ந்த மக்களிடையே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக கருதப்படுகிறது.. சமண சமயத்தின் மிகப்பெரிய தீர்த்தங்கரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த நாளை சமண மக்கள் கொண்டாடுகின்றனர்.. மகாவீர் ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடி, மகாவீரர் சிலைக்கு மலர்கள், இனிப்புகள் மற்றும் பழங்கள் சமர்ப்பித்து வணங்குகின்றனர். மேலும் ஏழை மற்றும் ஏழை மக்களுக்கு உணவளிக்க பலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றனர். இந்த புனித நாளில் சமண சமயத்தை சேர்ந்த மக்கள் கடுமையான விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
இந்நிலையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் நாளை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் பெங்களூரு நகரத்தில் விலங்குகளை நாளை இறைச்சி கடைகள் மூடப்படும்.. இறைச்சிக் கூடங்களில் விலங்குகளைக் கொல்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ராம நவமியை முன்னிட்டு மார்ச் 30 அன்று பெங்களூரு முழுவதும் இறைச்சி தடை உத்தரவு பிறப்பிகப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..