நியூசிலாந்து – இலங்கை இடையேயான ஆண்கள் டி20 போட்டியில் பெண் நடுவராக பங்கேற்றுள்ளார். ஆண்களுக்கான போட்டியில் பெண் நடுவர் பங்கேற்றது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆண் நடுவர்கள் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். ஆனால், முதன்முறையாக இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் பெண் நியூசிலாந்தை சேர்ந்த கிம் காட்டன் ஒருவர் நடுவராக பங்கேற்றுள்ளார். நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டுனெடினில் நடைபெற்றது. இந்த போட்டில் நியூசிலாந்து அணி, 14.4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து இலங்கை அணியை வென்றது. ஆண்களுக்கான இந்த போட்டியில் முதல்முறையாக நியூசிலாந்தை சேர்ந்த கிம் காட்டன் என்ற பெண் நடுவராக பங்கேற்றார்.
இந்த போட்டியில் கிம் காட்டன் பங்கேற்றதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற சாதனையை படைத்துள்ளார். காட்டன், 2018ம் ஆண்டு முதல், பெண்களுக்கான 54 டி20 போட்டிகள் மற்றும் பெண்களுக்கான 24 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.