fbpx

மாதவிடாய் கால எச்சரிக்கை!… டேம்பான்ஸ் பயன்படுத்துவதால் நோய் ஏற்படும் அபாயம்!… கட்டாயம் இதை செய்யுங்கள்!

மாதவிடாய் காலத்தில் டேம்பான்ஸ் பயன்படுத்துவதால் டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்னும் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேம்பான்ஸ் என்பது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நேப்கின், மென்ஸ்சுரல் கப் போன்ற ஒரு பொருள் தான். பெண்ணுறுப்பின் உள்ளே இதைப் பொருத்துவதன் மூலமாக உதிரப்போக்கை அது உறிஞ்சிக் கொள்கிறது.மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய மற்ற பொருட்களைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலான பலன்கள் இந்த டேம்பான்ஸ் பயன்பாட்டில் உண்டு. அதாவது, இதைப் பொருத்திக் கொண்டு நீங்கள் இயல்பாக நீச்சல் குளத்தில் கூட நீந்திச் செல்லலாம்.ஏனென்றால் நமது உடலில் கூடுதலாக ஒரு பொருளைப் பொருத்தியிருக்கிறோம் என்ற உணர்வை இது ஏற்படுத்தாது. மிகச் சரியாகப் பொருத்தும் பட்சத்தில் இலகுவான உணர்வைத் தரும்.

இந்த டேம்பான்ஸ் முழுக்க முழுக்க பஞ்சு பொதிகளால் ஆனதாக இருந்தாலும், சிலருக்கு பிறப்புறுப்பில் எரிச்சலை உண்டாக்கலாம். பொதிகளால் ஆனதாக இருந்தாலும் ஆரம்பத்தில் சிலருக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்புண்டு. மேலும் இதனை பயன்படுத்தும் போது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இல்லையெனில், உதிரப்போக்கில் இருக்கும் ரத்தத்துடன் உடலில் இருக்கும் ஸ்டெஃப்பிலிக்காக்கஸ் என்னும் பாக்டீரியா கலந்து நச்சுத்தன்மை உண்டாகி, டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்னும் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kokila

Next Post

கர்ப்பிணிகளே இனிமேல் பால் குடிக்காதீர்கள்!... வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கே ஆபத்து?... விவரம் இதோ!

Sun Mar 26 , 2023
பதப்படுத்தப்படாத பாலை கர்ப்பிணிகள் குடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய பானங்கள் குறித்து பார்க்கலாம். கர்ப்பக்காலங்களில் பெண்கள் தனது ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி உணவு பழக்கங்களை கையாளவேண்டும். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகளையும் கவனத்துடன் எடுத்துகொள்வது அவசியமாக உள்ளது. அந்தவகையில் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மது பானங்களை எடுத்துக்கொள்வது, […]
ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு..!! தமிழக மக்கள் அதிர்ச்சி..!!

You May Like