fbpx

பால் விலை ரூ.3 உயர்வு.. அமுல் நிறுவனத்தை தொடர்ந்து மற்றொரு நிறுவனம் அறிவிப்பு..

அமுல் நிறுவனத்தை தொடர்ந்து வெர்கா நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பால் விநோயக நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் பால் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.. அமுல் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது.. அமுல் பாலின் அனைத்து வகைகளுக்கும் மாற்றியமைக்கப்பட்ட விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. அதன்படி தற்போது, அமுல் தாசா ஒரு லிட்டர் விலை ரூ.54 எனவும், அமுல் கோல்டு விலை ரூ.66; அமுல் பசும்பால் ரூ.56, அமுல் ஏ2 எருமைப்பால் ரூ.170 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது..

ஷாக் நியூஸ்..!! பால் விலை மீண்டும் உயருகிறது..? வெளியான அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

இந்நிலையில் அமுல் நிறுவனத்தை தொடர்ந்து வெர்கா நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது.. பஞ்சாப் மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் வெர்கா என்ற பெயரில் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.. அந்நிறுவனம் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.. இந்த விலை உயர்வு இன்று (பிப்ரவரி 4) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

அதன்படி லிட்டருக்கு ரூ.57க்கு விற்கப்பட்ட ஸ்டாண்டர்ட் பால் தற்போது ரூ.60க்கும், ஃபுல் க்ரீம் பால் லிட்டருக்கு ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.66க்கும் விற்பனை செய்யப்படும். முன்பு லிட்டருக்கு ரூ.51க்கு விற்கப்பட்ட டோன்டு பால் இப்போது ரூ.54க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. இதை தொடர்ந்து மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

உஷார்...! இடிமின்னலுடன் மழை பெய்யும்...! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!

Sat Feb 4 , 2023
தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய […]

You May Like