fbpx

மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு..!! வருமான வரித்துறை அதிரடி சோதனை..!!

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்தனர். இந்நிலையில், தற்போது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்தும் சோதனை நடத்துகின்றனர்.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள், சென்னையில் அவருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் நடைபெற்றது. இந்த சோதனையில் சில இடங்களில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’’சீக்கிரம் டா’..!! பெட்ரோல் பங்க் கழிவறையில் உல்லாசம்..!! காதல் ஜோடியை கார்னர் செய்த ஊழியர்கள்..!!

Wed Nov 22 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கருங்கல் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 20ஆம் தேதி கேரள பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் 23 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியுடன் வந்தார். அந்த பெண் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் வந்து, கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டார். அந்த ஊழியரும் அவரை அனுமதித்ததை அடுத்து அந்த பெண் கழிவறைக்குள் சென்றார். […]

You May Like