காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் நடந்த கூட்டத்தில், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மழை பற்றாக் குறையால், கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார்.
மாண்டியில் செய்தியாளர் மத்தியில் பேசிய அவர்; மாநிலத்தில் மழைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்க குடிக்க தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் நடந்த கூட்டத்தில், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடாத நிலைமை உள்ளதாக கூறினார்.