fbpx

மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..!! ‘டெட்ரா பேக்’ மது விற்பனை..!! விரைவில் அறிவிப்பு..!!

பாட்டில் பயன்பாட்டுக்கு பதில் குளிர்பானங்கள் அட்டை பெட்டிகளில் விற்பனை செய்வது போல ‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வௌியிடப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்கில் மதுவிற்பனை செய்வது குறித்து அரசு நீண்ட நாட்களாக யோசித்து வருகிறது. பாட்டில்களை கண்ட இடங்களில் போடுவதால் விலங்குகள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ‘டெட்ரா பேக்’ மது என்பது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் மதுபானம் ஆகும். பாட்டில் பயன்பாட்டுக்கு பதில் குளிர்பானங்கள் அட்டை பெட்டிகளில் விற்பனை செய்வது போல மதுபானங்கள் சிறிய அட்டைபெட்டிகளில் அடைத்து விற்பனை செய்வது தான் டெட்ரா பேக் மதுவாகும்.

தீபாவளி போன்ற பண்டிகையின்போது பொதுவாக எல்லா பொருட்களின் விற்பனையும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் மதுவிற்பனையும்.. அதற்காக திட்டமிட்டு மது விற்பனையை அரசு நடத்தப்படவில்லை. மது விற்பனையை தடுப்பதும் கடினம். மகிழ்ச்சிக்காக பலர் மது குடிக்கின்றனர். எனினும் மக்கள் மது குடிப்பதை குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குழு வைத்து குடிப்பழக்கத்தின் தீமைகள் குறித்து ‘கவுன்சிலிங்’ கொடுத்து வருகிறோம். மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதுமே கிடையாது. மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் வேண்டுகோள் ஆகும்.

தமிழ்நாட்டில் ‘டெட்ரா பேக்’ மது விற்பனை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. முதல்வர் அறிவித்தபடி தமிழகத்தில் மது விற்பனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது அறிவுறுத்தலின் படியே 500 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. ஒரேநாளில் மது குடிக்கும் பழக்கத்தை மாற்றிவிட முடியாது. பல நடவடிக்கைகளை புதிதாக செய்து வருகிறோம். அது வெற்றி பெறும்போது பிரச்சனைக்கு தீர்வு வரும்” என்றார்.

Chella

Next Post

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! இலங்கையில் அதிரடியாக குறைந்த உரத்தின் விலை..!!

Fri Nov 24 , 2023
இலங்கை சந்தையில் உரத்தின் விலை குறைந்துள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தேவையான அளவு உரம் நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார். 10,000 மெட்ரிக் டன் யூரியா உரம், டிசம்பர் மாதத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும், தற்போது 60,000 மெட்ரிக் டன் உரம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடம் 15,000 மெட்ரிக் டன் யூரியா உரம் கையிருப்பில் உள்ளது. தனியார் […]

You May Like