fbpx

மக்களே கவனம்…! தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை…! தமிழக அரசு கொடுத்த எச்சரிக்கை…!

தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 முதல் 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.

சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 முதல் ரூ.68 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பண்ணைப் பசுமைக் கடைகள் சென்னையில் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாலும், அக்கடைகளில் வழக்கமாக விற்கப்படுவதைப் போன்று மிகக்குறைந்த அளவிலேயே தக்காளி போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சந்தையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டில்‌ தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின்‌ மூலம்‌ செயல்பட்டு வரும்‌, பண்ணை பசுமை நுகர்வோர்‌ கடைகள்‌ மற்றும்‌ நகரும்‌ பண்ணை பசுமை நுகர்வோர்‌ கடைகள்‌ மூலம்‌ கொள்முதல்‌ விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தக்காளியை பருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர்‌ பெரியகருப்பன்‌ தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

தமிழகம் முழுவதும்...! அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர் மன்றம்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Wed Jun 28 , 2023
இது குறித்து மாநில திட்ட இயக்குநர்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி உள்ள. சுற்றறிக்கையில்‌, “மாணவர்கள்‌ தங்கள்‌பள்ளிக்‌ காலத்தை முடித்த பின்பும்‌,அவர்களது வாழ்வின்‌ அனைத்து கட்டங்களிலும்‌ தொடர்ச்சியாக நம்‌ அரசுப்‌பள்ளி ஆசிரியர்கள்‌ உடன்‌ பயணிப்பதோடு மட்டுமல்லாமல்‌, அவர்களுக்கு வழிகாட்டியாகவும்‌, முன்மாதிரியாகவும்‌ செயல்படுவதை எண்ணி பள்ளிக்கல்வித்துறை பெருமை கொள்கிறது. இதனைத்‌ தொடர்ந்து, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற முன்னாள்‌ மாணவர்களை ஒருங்கிணைக்கும்‌ முயற்சியை பற்றியும்‌, அவர்கள்‌ தொடர்ச்சியாக பள்ளியின்‌ மீது […]

You May Like