fbpx

மேடையிலேயே கண்கலங்கிய உதயநிதி ஸ்டாலின்….!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ள நிலையில், சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 19) என்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரைத்தொடர்ந்து அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் தந்தை மகன் தற்கொலை செய்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நீட் எதிர்ப்பு தீவிரமானது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது அந்த ஆவணப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே கண்கலங்கினார். அதன் பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக அவர் மத்திய பாஜக அரசையும், ஆளுநர் ஆர்என் ரவியையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

Kathir

Next Post

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்றே கடைசி நாள்!… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Mon Aug 21 , 2023
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேர்வர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது […]

You May Like