முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்ல உள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்ல உள்ளனர். இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு விமானம் மூலம் ஒடிசா புறப்படுகின்றனர். அங்கு மீட்டு பணிக்கான அனைத்து உதவிகளையும் அவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.