மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், இதுவரை கனமழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா- கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். ‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
நிதி மட்டுமின்றி தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்க உள்ளனர். இந்த செயல், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.