fbpx

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீதம்; மனைவியின் முடிவால் அதிர்ச்சியில் கணவன்..!

சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசெல்வன். இவரது மனைவி வகித்தாபுளோரா. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். கணவன் ஞானசெல்வன் ஆன்லைனில் ரம்பி விளையாடி, 1000 ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகின்றது.

இதனை அறிந்த வகித்தா கணவரிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஞானசெல்வன் கதறி அழுதார்.

இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த வகித்தா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.அதன் பிறகு விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! சுவாசப் பிரச்சனையால் தீவிர சிகிச்சை..!!

Sun Sep 25 , 2022
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]
முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! சுவாசப் பிரச்சனையால் தீவிர சிகிச்சை..!!

You May Like