fbpx

காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் அதிரடி நீக்கம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி கே.எஸ்.அழகிரி – ரூபி மனோகரன் தரப்புக்கு இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதல் சம்பவத்திற்கு நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என்பதால் அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் அதிரடி நீக்கம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், எம்.எல்.ஏ-வுமான ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுள்ளார். ரூபி மனோகரனை நீக்க வேண்டும் என 64 மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#திருப்பூர் :நண்பர் இறந்த செய்தியை கேட்ட மற்றொரு நண்பர் மாரடைப்பால் இறந்த சோகம்..!

Thu Nov 24 , 2022
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மண்ணரில் சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஹோட்டல் ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்றைய முன்தினத்தில் காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.  பேருந்து நிறுத்தத்திலிருந்து ரோட்டினை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து மோதப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி காவல்துறையினர் […]

You May Like