fbpx

இந்தியாவில் நடைபெறும் ரெய்டுகளுக்கு மோடி காரணமில்லை… திடீர் பல்டி அடித்த மம்தா பானர்ஜி…

 இந்தியாவில் பலஇடங்களில் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் ஐடி நடத்தி வரும் ரெய்டுகளுக்கு மோடி காரணமில்லை என தீர்மானம் நிறைவேற்றி மம்தா பானர்ஜி அந்தர்பல்டி அடித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொல்கத்தா, டெல்லி  உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வரம்புமீறி நடப்பதாக தீர்மானம் கொண்டு வர மேற்கு வங்க சட்டப்பேரவையில் முடிவு செய்யப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜி தீர்மானம் நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தை படித்துவிட்டு பின்னர் அவர் கூறுகையில் ’’ மத்திய அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகின்றது. இந்த தீர்மானம் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் எதிரானது கிடையாது. பாரபட்சத்துடன் செயல்படக்கூடாது என்பதற்காகவே தீர்மானம். பிரதமர் மோடி மத்திய அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுத்தச் செய்வதாக நான் நினைக்கவில்லை’’ என்றார்.

மேலும் , ஒரு சில தலைவர்கள்தான் தன் சுயநலத்திற்காக பின்னணியில் இருக்கின்றார்கள். சிபிஐ அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்கு முறையாக அறிக்கை தாக்கல் செய்வதில்லை. இது பலருக்கு தெரியாது. இதனால்தான் தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகின்றனர். எனவே இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. என்றார்.

Next Post

மேலும் ஒரு பரபரப்பு புகார்… ஐ.ஐ.டி. மும்பை கல்லூரியில் பெண்களை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு …

Tue Sep 20 , 2022
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் வீடியோ வெளியானதாக பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் சம்பவம் மும்பை ஐ.ஐ.டியில் நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் ஜன்னல் வழியாகவும் சில நேரங்களில் குளியல் அறையிலும் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரில் ’’ மாணவிகளின் தனிப்பட்ட பகுதிகளில் […]

You May Like