fbpx

ஷாக்…! மீண்டும் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்திய நிறுவனம்..! இன்று முதல் அமல்…!

மதர் டெய்ரி நிறுவனம் பாலின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி உள்ளது.

முன்னணி பால் சப்ளையரான மதர் டெய்ரி, ஃபுல் க்ரீம் பாலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முழு கிரீம் பால் விலையில் மாற்றம் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள முதன்மையான பால் சப்ளையரான மதர் டெய்ரி இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு முறை பால் விலையை உயர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான அளவுடன், டெல்லியில் பால் வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது; மதர் டெய்ரி ஃபுல் க்ரீம் பாலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் முதல் 64 வரை உயர்த்தியுள்ளது. இன்று முதல், டோக்கன் பால், லிட்டருக்கு, 50 ரூபாய்க்கு விற்கப்படும், இதற்கு முன், 48 ரூபாயாக இருந்ததை விட, 2 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Vignesh

Next Post

#Breaking: அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கைது...! போலீசார் நடவடிக்கை

Mon Nov 21 , 2022
அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்துள்ளனர். தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் அறிமுகமாகிய கிஷோர் கே ஸ்வாமி சமூகவலைதளங்களில் திமுக-விற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதில் மிக முக்கியமான நபர். இவர் பெரும்பாலும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்தி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் மாற்று சிந்தனைக் கொண்ட அரசியல் பிரமுகர்களையும் விமர்சிப்பதை வழக்கம் உடைவர். இந்த நிலையில் தான் சமூக வலைதளத்தில், முதல்வர் குறித்து அவதுாறாக கருத்து பதிவிட்ட, […]

You May Like