சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன் வரி செலுத்த வேண்டும்.
இது குறித்து தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தனது செய்தி குறிப்பில்; நடப்பு காலாண்டு 31.03.2023 -க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன் வரி செலுத்த வேண்டிய கடைசி நாள் வருகின்ற 30.03.2023 ஆகும். இது தொடர்பாக அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் வரி கேட்பு அறிவிப்பு மற்றும் முகாந்திரம் (Demand Notice) அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வாகன உரிமையாளர்களும் அரசுக்கு செலுத்தவேண்டிய சாலை வரியினை Online மூலம் உரிய காலக்கெடுவிற்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும். மேலும், வரி செலுத்தாமல் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை பொது சாலையில் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.