பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கின்ற சி எம் ஸ் நிறுவனம் வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்தந்த வாங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஒரு மணி அளவில் 10 பேர் அடங்கிய குழு இந்த நிறுவனத்திற்கு நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த இரண்டு காவலாளிகளையும் கட்டி போட்டது.
அவர்களிடமிருந்து துப்பாக்கி எடுத்துக் கொண்டு நிறுவனத்திலிருந்து 7 கோடி கொள்ளை அடித்து சென்றது அப்போது பணியில் இருந்த 5 ஊழியர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதோடு அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பணம் கொண்டு செல்லும் வேனையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். திரைப்பட பாணியில் ஒரு மணி நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.