fbpx

பேஸ்புக் காதலனை பார்க்க ஆசையாக வந்த மும்பை பெண்..!! இரவு முழுவதும் பாலியல் உறவு வைத்து மோசடி..!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (24). இவருக்கும் மும்பையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இந்நிலையில், தனது காதலியை நேரில் பார்க்க ஆசையாக உள்ளதாக செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு பிறந்தநாள் என்றும் கூறி அந்த பெண்ணை கோவைக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த பெண்ணும் செந்தில்குமாரை நம்பி அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளார். அவரை அழைத்துக் கொண்டு கோவையின் பல பகுதிகளில் சுற்றிக்காட்டிய செந்தில்குமார், இரவில் அவர் தங்குவதற்காக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்துள்ளார்.

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்..!! காதலனை பார்க்க ஆசையாக வந்த மும்பை பெண்..!! இரவு முழுவதும் பாலியல் உறவு வைத்து மோசடி..!!

அப்போது, அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து நெருக்கமாக இருந்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் பணத்தை பல கட்டங்களாக செந்தில்குமார் வாங்கி இருக்கிறார். ஆனால், அதன் பிறகு அவரிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள தொடங்கினார் செந்தில்குமார். வாக்குறுதி அளித்ததைபோல் திருமணமும் செய்துகொள்ளவில்லை. தன்னுடைய செல்போன் அழைப்புகளை எடுக்காமல் செந்தில்குமார் தவிர்த்து வந்ததால், வேறொரு எண்ணில் இருந்து செந்தில்குமாரை தொடர்புகொண்டு இருக்கிறார். அந்த அழைப்புகளையும் செந்தில்குமார் எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மும்பை பெண் கோவை மாநகர மேற்கு பகுதி மகளிர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

கள்ளக்காதலியின் வீட்டுக்குள் நுழைந்த பூவரசனை புரட்டிப்போட்ட உறவினர்கள்..!! இடுப்பை சுற்றி சூடு வைத்த பரிதாபம்..!!

Wed Jan 11 , 2023
கள்ளக்குறிச்சியில் திருமணமான பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, கணவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து சம்பவம் செய்ய முயன்ற இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் மடக்கிப் பிடித்து இடுப்பை சுற்றி சூடு வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் காரனுர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவர் பூவரசன். இவர், தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது ஊரில் உள்ள திருமணமான […]
கள்ளக்காதலியின் வீட்டுக்குள் நுழைந்த பூவரசனை புரட்டிப்போட்ட உறவினர்கள்..!! இடுப்பை சுற்றி சூடு வைத்த பரிதாபம்..!!

You May Like