fbpx

‘பாபநாசம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை..!! தோண்ட தோண்ட துர்நாற்றம்..!! திகில் சம்பவத்தின் பின்னணி..!!

நடிகர் கமல்ஹாசனின் ’பாபநாசம்’ பட பாணியில் கேரளாவில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் பிந்து குமார் (43). இவரை கடந்த 26ஆம் தேதி முதல் காணவில்லை என்று இவரது குடும்பத்தினர் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து பிந்துகுமாரை தீவிரமாக தேடி வந்தனர். காணாமல் போன பிந்து குமாரின் செல்போன் எண் சிக்னலை வைத்தும், அவர் யாரிடம் கடைசியாக பேசினார் என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்தனர். இதற்கிடையே, பிந்து குமாரின் இருசக்கர வாகனம் கொட்டாரக்கடவு பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

'பாபநாசம்' பட பாணியில் அரங்கேறிய கொலை..!! தோண்ட தோண்ட துர்நாற்றம்..!! திகில் சம்பவத்தின் பின்னணி..!!

இதனைத் தொடர்ந்து பிந்து குமாரின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் கடைசியாக சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பரிடம் பேசியது தெரியவந்துள்ளது. அதனால் முத்துக்குமாரின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால், அவரது செல்போன் சுவிச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் போலீசார் அவரது வீட்டிற்கே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால், அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, முத்துக்குமார் குடும்பத்தினரோடு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

'பாபநாசம்' பட பாணியில் அரங்கேறிய கொலை..!! தோண்ட தோண்ட துர்நாற்றம்..!! திகில் சம்பவத்தின் பின்னணி..!!

இதற்கிடையே, போலீசார் முத்துக்குமாரின் வீட்டை சுற்றி சோதனை செய்து பார்த்துள்ளனர். அங்கு வீட்டின் முன்புறத்தில் சமீபத்தில் குழி ஒன்று தோண்டி மூடப்பட்டிருப்பது போன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே, அந்த இடத்தை தோண்டி பார்த்துள்ளனர். போலீசார் சந்தேகித்தது போன்று குழியை தோண்ட தோண்ட துர்நாற்றம் வீசியிருக்கிறது. ஒருகட்டத்தில் குழிக்குள் ஒரு ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். உடலை புதைத்து விட்டு துர்நாற்றம் வெளியே வராமல் இருப்பதற்காக அதற்கு மேல் கான்கிரீட் போட்டு அதற்கு மேல் மீண்டும் மண்ணை நிரப்பி உள்ளதும் வெளிச்சத்திற்கு வந்தது.

'பாபநாசம்' பட பாணியில் அரங்கேறிய கொலை..!! தோண்ட தோண்ட துர்நாற்றம்..!! திகில் சம்பவத்தின் பின்னணி..!!

இதனைத் தொடர்ந்து அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட உடலை மீட்ட போலீசார், பிந்து குமாரின் உறவினர்களை அழைத்து அடையாளம் கண்டு உறுதி செய்தனர். இதனையடுத்து முத்துக்குமாரை கைது செய்த போலீசார், காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட பிந்துகுமாரை முத்துக்குமார்தான் கொலை செய்தாரா? கொலைக்கு என்ன காரணம்? இல்லை வேறு யாராவது கொலை செய்துவிட்டு முத்துக்குமார் மீது பழியை போடுவதற்காக திசை திருப்புகிறார்களா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Chella

Next Post

திருச்சி பலூன் வியாபாரிக்கு நீதிமன்றக் காவல் …

Tue Oct 4 , 2022
திருச்சி மலைக்கோட்டை அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் மாநகரையே பரபரப்பாக்கிய பலூன் வியாபாரியை நீதிமன்றக் காவலில்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நேற்று முன்தினம் ஜவுளி கடை வாசலில் ஹீலியம் பலூன் விற்றுக் கொண்டிருந்தார் அனார் சிங் என்ற உத்தரபிரதேச வியாபாரி. அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் […]

You May Like