fbpx

”தமிழ்நாட்டில் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை”..!! ஜான் பாண்டியன் பரபரப்பு பேட்டி..!!

திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் அதிகளவில் படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன. இது போன்ற சம்பவங்களுக்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர். விசிக தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் என்னை போன்ற தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெரிய ஆளாகிவிடலாம் என்ற எண்ணம் சிலரிடம் இருக்கிறது.

எங்களைப் போன்ற தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றினால் தான் உண்மை வெளிவரும். ஏழை, எளிய மாணவர்கள் படித்து மருத்துவர்கள் ஆவதற்கு காரணம் நீட் தேர்வு தான். அதனால், நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும். அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.

மாஞ்சோலையில் 5 தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மாஞ்சோலை மக்களுக்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Read More : இந்த பொருளின் விலை ஏன் இப்படி இருக்கு..? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா..?

English Summary

Tamilnadu People’s Development League President John Pandian has said that there is no security for his life in Tamil Nadu under the DMK regime.

Chella

Next Post

’ஹேப்பி எண்டிங் வேணுமா’..? மசாஜ் சென்டரில் மஜாவாக நடக்கும் விபச்சாரம்..!! இப்படித்தான் வலை விரிப்பார்கள்..!!

Fri Jul 19 , 2024
In Madurai, some people who run massage centers in the name of 'spa', are also engaged in illegal sex work.

You May Like