fbpx

8 நாட்களாக நிலத்தடியில் இருந்து கேட்கும் மர்ம சத்தம்.. பீதியில் உறைந்த கிராம மக்கள்..

மகராஷ்டிராவில் உள்ள கிராமத்தில் நிலத்தடியில் இருந்து கேட்கும் மர்ம சத்தத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்..

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தில், நிலத்தடியில் இருந்து மர்ம கேட்பதாக அப்பகுதிகள் மக்கள் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள், இந்த நிகழ்வை ஆய்வு செய்ய இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்களை கிராமத்திற்கு வருகை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.. ஆனால், அப்பகுதியில் நிலநடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 6 முதல் மர்மமான நிலத்தடி சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.. லத்தூர் மாவட்ட ஆட்சியர் பிருத்விராஜ் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே மர்ம ஒலி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு இன்று கிராமத்திற்கு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலங்கா தாலுகாவில் உள்ள கிராமம் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது, அங்கு 1993-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9,700 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

வெளியாவதற்கு முன்பே வசூலை வாரி குவிக்கும் ’வாரிசு’..! கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர்..!

Wed Sep 14 , 2022
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் ’வாரிசு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், […]
நாளை வெளியாகும் வாரிசு படத்தின் 2-வது பாடல்..!! இது விஜய்க்கு முக்கியமான நாள்..!! எதனால் தெரியுமா?

You May Like