நெல்லை மற்றும் கோவையில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார்.
கோவை மாவட்டம் உக்கடம் அல்அமீன் காலனி பகுதியில் வசிக்கும் ரகுமான் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.சி. மெக்கானிக்காண ரகுமான் வீட்டில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ .ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.