fbpx

நாராயணபுரம் ஏரி உடைப்பு..!! நமீதா வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்..!! குழந்தைகளுடன் சிக்கித் தவிப்பு..!!

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால், அந்த பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அங்கு 6 அடி தண்ணீர் நிற்கிறது. இங்கு தான் நடிகை நமீதா வசித்து வருகிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது.

ஓராண்டு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் தவித்து வருகிறார். இதுவரை, இங்கு சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை. நாராயணபுரம் ஏரி உடைந்ததால், அந்த பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பள்ளிக்கரணை ஆனந்த் நகர் எக்ரட் பார்க்கில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

அங்கு இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை. வயதானவர்கள் சிக்கி கொண்ட நிலையிலும், உதவிக்கு ஒருவரும் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

Chella

Next Post

குளிர்காலத்தில் காளான் சாப்பிடுவது அவசியம்!… ஏன் தெரியுமா?… நிபுணர்களின் அறிவுறுத்தல்!

Tue Dec 5 , 2023
குளிர்காலம் வந்துவிட்டது. இந்த பருவத்தில், சந்தைகளில் வண்ணமயமான, பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்திருக்கும். இருப்பினும், குளிர்காலத்தில் குறிப்பாக சாப்பிட வேண்டிய சில சிறப்பு காய்கறிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அற்புதமான ஆரோக்கிய பலன்களைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு காய்கறிதான் ‘காளான்’. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். காளானில் புரதம் […]

You May Like