fbpx

போதை பொருள்..!! சிறுநீரில் தண்ணீரை கலந்து கொடுத்த பிரபல நடிகை..!! மருத்துவ குழுவினர் அதிர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராகினி திவேதி. இவர் பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதலில் குடும்பபாங்கில் நடித்த இவர், பின்னர் உச்சகட்ட கிளாமர் காட்டினார். விருது விழா ஒன்றின் போது தன்னுடைய மேலாடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.

இந்நிலையில், இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். இவர் போதை பொருள் பயன்படுத்தினார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இவருடைய சிறுநீரை பரிசோதனை செய்ய மருத்துவ ஆய்வு குழுவினர் சென்றனர். அப்போது, தன்னுடைய சிறுநீரில் குடிநீரைக் கலந்து போதை பொருள் பயன்படுத்துவதற்கு உண்டான தடையத்தை அழிக்க முயன்றார் ராகினி திவேதி என்று மருத்துவ ஆய்வு குழு அதிர்ச்சியை கிளப்பியது.

சிறுநீரில் தண்ணீரை கலப்பதன் மூலம் சிறுநீரை நீர்த்துப் போக செய்துவிட முடியும். எனவே, ஆய்வு முடிவில் இவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்ற முடிவு வர வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரில் குடிநீர் கலந்து கொடுத்து இருக்கிறார் என்று மருத்துவ ஆய்வு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

’இப்படியொரு திருமணம் தேவையா’..? ’என்னுடைய வலி நிச்சயம் பணக்கார குடும்பங்களை சென்றடையும்’..!! பிரதமர் மோடி வேதனை..!!

Mon Nov 27 , 2023
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலமாகஉரையாற்றி வருகிறார். அந்த வகையில் அவர் பேசுகையில், “திருமண சீசன் தொடங்கிவிட்டது. இந்த திருமண சீசனில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று சில வர்த்தக அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. திருமணத்திற்கு பொருட்களை வாங்கும் போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திருமணம் என்ற தலைப்பில் பேசியதால் நான் […]

You May Like