fbpx

கவனம்.‌‌.‌. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் செப்: 15 என அறிவிப்பு…! உடனே செய்து முடிக்க வேண்டும்…!

கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் தேசிய கோபால் ரத்னா விருதுகள் – 2022-க்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக வரவேற்கிறது. கடந்த 01.08.2022 முதல் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 15.09.2022 ஆகும். இவ்விருதுகள் தேசிய பால்வள தினத்தையொட்டி, (26 நவம்பர் 2022) வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளின் நீடித்த வாழ்வாதாரத்திற்காக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பசு மற்றும் எருமை இனங்களை சிறப்பான முறையில் வளர்த்த பால்பண்ணை விவசாயி, சிறந்த செயற்கை கரூவூட்டல் தொழில்நுட்பம், சிறந்த பால் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன.

Vignesh

Next Post

ரூ.13,000 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் 8-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Thu Aug 25 , 2022
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார், அலுவலக உதவியாளர் மற்றும் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஒன்பது காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு […]

You May Like