நாட்டிலுள்ள பெருமைக்குரிய குடிமக்கள் அனைவருக்கும் தேசிய கொடிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தபால் நிலையங்களில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஏராளமான குடிமக்கள், இணையவழி தபால் அலுவலகம் மூலமாகவும் தேசிய கொடிகளை வாங்குகின்றனர். (https://www.epostoffice.gov.in/ProductDetails/Guest_productDetailsProdid=ca6wTEVyMuWlqlgDBTtyTw== ).
எந்தவொரு விநியோக கட்டணமுமின்றி, நாட்டில் எந்த முகவரியில் வசிப்பவர்களுக்கும், தேசிய கொடிகளை தபால் துறை விநியோகம் செய்கிறது. இணைய வழியில் தேசிய கொடி வாங்குவோருக்கு கொடிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 12 ஆகஸ்ட் 2022 நள்ளிரவுக்கு முன்பாக, பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.